விளக்கு ஏற்றும் முறைகள்
எந்த எண்ணெய்யில் விளக்கேற்றினால் என்ன பலன்?
பசுவின் நெய்யை ஊற்றி விளக்கேற்றினால், ஏழ்மை, தீயசக்திகள் நீங்கி, நேர்மறை அதிர்வுகள், ஆரோக்கியம், செல்வம், நல்ல அதிர்ஷ்டம் மற்றும் வளமான வாழக்கை உண்டாகும்.
எள்ளின் மூலம் தயாரித்த நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் சகல தோஷங்களும், தீய ஆவிகளும் நீக்கப்பட்டு, நாள்பட்ட பிரச்சனைகள் மற்றும் ஏழரை சனியின் பாதிப்புகள் ஆகியவை குறையும்.
வேப்ப எண்ணெயில் தீபம் ஏற்றினால் குல தெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைப்பதுடன், வீட்டில் செல்வ வளங்கள் அதிகரிக்கும்.
விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றினால் குடும்ப சந்தோஷம், வளர்ச்சி, ஆன்மீக முன்னேற்றம், உறவுகள், புகழ் மற்றும் செல்வ வளம் ஆகியவை பெறுகும்.
தேங்காய் எண்ணெயில் விளக்கேற்றுவதால் விநாயகரின் அருளை பெறலாம். குலதெய்வத்தின் அருள் பெற்று மகிழ்தச்சியாக இருக்கலாம்.
இலுப்பை எண்ணெயில் சிவ பெருமானின் அருளை பெறுவதற்காக தீபம் ஏற்றலாம். இதன் மூலம், கடன் தொல்லை, உடல் நலக்கோளாறு போன்றவை நீங்கும்.
பஞ்ச தீப எண்ணெய்
நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் மற்றும் பசுநெய் ஆகியவை கலந்து பஞ்ச தீப எண்ணெயாகும்.
இந்த பஞ்ச தீப எண்ணெய்யில் விளக்கு ஏற்றினால் நம் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள், தீவினைகள், கடன் தொல்லைகள், திருஷ்டி, எதிர்மறை எண்ணங்கள், நோய்கள், ஏழ்மை ஆகிய அனைத்தும் நீங்கி, செல்வ வளம், அதிர்ஷ்டம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, போன்றவை உண்டாகும்.
Comments
Post a Comment